இலகுவழி

Sunday, 12 September 2021

அரச சேவையில் தவிர்க்கவேண்டிய 3C கள்

நான் அரச சேவையில் இணைந்த ஆரம்ப காலக்கட்டத்தில் ஒரு தடவை கேள்வி நடைமுறைப் போட்டியில் (Procurement) வெற்றிபெற்ற ஒரு வழங்குனரால் ஓர் Laptop வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த Laptop இனை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எனக்கு எதாவது குழப்பம் ஏற்பட்டால் எனது அப்பாவிடம் விளக்கம் கேட்பேன்.  அன்றும் அவ்வாறு எனது அப்பாவிடம் குறித்த வழங்குனர் எனக்கு வழங்கவுள்ள Laptop இனை பற்றி எடுத்துரைத்து நான் எந்தவித பக்கச்சார்பாகவும் நடக்கவில்லை. அதேநேரம் எனது நடவடிக்கையால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நியாயமான முறையில் அவர் வெற்றி பெற்றார். மேலும் வழங்குனர் விரும்பியே அதனை எனக்கு Complement ஆக வழங்குகின்றார். எனவே அதனை நான் வாங்குவதில் எந்தத் தவறுமில்லை என நினைக்கிறேன். அதனை வாங்கவா? என வினாவினேன்.

அதற்கு அவர் தாபன விதிக்கோவைக்கு அமைய ஓர் அரச உத்த்தியோகதர் எந்தவிதாமான அன்பளிப்புக்களையும் பெறக்கூடாது என்று கூறினார்.  மேலும் இன்று நீ வாங்கும் Complement ஆனது நாளை உன்னை Commission வாங்கத்தூண்டும். இதுவே பின்னாளில் Corruption ஆக மாறும். ஓர் அரச உத்தியோகத்தருக்கு இந்த மூன்று C க்களும் இருக்கக்கூடாது என்றார். உனது கௌரவம், உனது கல்வி, எனது மரியாதை, எங்களது குடும்பம் போன்றவற்றை சிறிது காலம் மட்டுமே பயன்படுத்தக்கூடிய  ஓர் Laptop பிற்கு அடைவுவைக்க விரும்புகிறாயா? என்று கேட்டார்.  உனது மேலதிகாரி உன்னை அழைக்கும்பொழுது துணிவாக சென்று அவர்முன் நின்று உரையாட வேண்டும். இதுவே சிறந்த சொத்து. நேர்மையான ஒரு அதிகாரிக்கு மற்றவர் கொடுக்கும் மரியாதையை நீ அவ்வாறு இருந்து பார்க்கும் பொழுது மட்டுமே தெரியும். வழங்குனர் ஒருவர், ஓர் அதிகாரியின் அறைக்கதவை திறப்பதிலிருந்து முன்னால் உட்காரும் வரை உற்றுநோக்கினால் இருவருக்குமிடையில் உள்ள உறவினை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். நீயொரு நேர்மையான, மற்றவர்கள் மதிக்கின்ற அதிகாரியாக இருந்தால் மட்டும் போதும் என்றார்.

மாற்று அல்லது மாறு

ஒரு தடவை எனது அலுவகத்தில் பணியாற்றும் ஓர் உத்தியோகத்தரின் செயற்பாட்டினால் ஏனைய உத்தியோகத்தர்கள் மூளைச்சலவை செய்யப்படுவதாக உணர்ந்தேன். ஆனால் அவ் உத்தியோகத்தர் நெருக்கடியாக காலகட்டங்களில் என்னுடன் இணைந்து பணியாற்றியவர். அவரில் நான் மிகவும் மதிப்பு வைத்திருந்தேன். எனவே என்ன செய்வதென்று தெரியாது எனது அப்பாவிடம் அந்த உத்தியோகத்தரின் நற்பண்புகளையும் எடுத்துக்கூறி தற்பொழுது அவரினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் கூறி ஆலோசனை கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டு "உனக்கு ஒருவரை பிடிக்கவில்லையென்றால் உடனே மாற்று மாறாக ஒருவருக்கும் உன்னைப் பிடிக்கவில்லையென்றால் நீ மாறு" என்கிறார். நான் குழப்பமாக அவரைப் பார்த்தேன் 

நீ ஒரு குழுவினை வழிநடத்தும் பொழுது குழுவில் ஓர் அங்கத்தவரினால் குழுவின் ஒட்டுமொத்த குறிக்கோள் பாதிக்கப்படுகிறது என்றும் அவருடைய செயற்பாடுகள் தவறானவை என நீ  கருதும் பட்சத்தில் உடனடியாக அதனை அவருக்கு தெரியப்படுத்தி அவரின் நடவடிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு அவர் விரும்பாது அல்லது ஒத்துழைக்காது விட்டால் கௌரவமாக அவரை இடம்மாற்ற வேண்டும். மாறாக ஒட்டுமொத்த குழுவும் உனது தலைமைத்துவத்தை விரும்பாது விட்டால் உடனடியாக உனது தலைமைத்துவப் பாங்கினை மாற்ற வேண்டும். அதன்பின்னரும் அவர்கள் உன்னை விரும்பாது விட்டால் நீ தலைமைப் பொறுப்பிலிருந்து மாறவேண்டும். நேரம் பொன்னானது என்பதனால் ஆழமாக சிந்த்தித்து விரைவாக உனது முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Saturday, 11 September 2021

மாதா, பிதா, குரு, தெய்வம்

"மாதா, பிதா, குரு, இறுதியாக தெய்வம் என்று எம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்களே" ஏன் கடவுளுக்கு இறுதியிடத்தினை கொடுத்துள்ளனர் என அப்பாவிடம் கேட்டேன்.


"உண்மையில் இந்த ஒழுங்குவரிசை ஏற்றத்தாழ்வினை குறிக்கவில்லை. மாறாக ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து குறிப்பிட்ட காலம் தாயின்தயவினால் உலகை அறிந்துகொள்கிறது. பின்னர் ஐந்து வயதுவரை தந்தையின் உதவியுடன் அறிவை வளர்கிறது. தொடர்ந்து பாடசாலைக்கு சென்று ஆசிரியர்களின் வழிகாட்டலில் உலகவிடையங்களை அறிந்து நல்லது கேட்டதினை புரிந்து கொள்கிறது. இறுதியாக தனது சொந்தக்காலில் நிற்கும்பொழுது கடவுளின் துணை அதற்கு கிடக்கிறது. இதனையே முன்னோர்கள் அவ்வாறு மாதா, பிதா, குரு, தெய்வம் எனக் குறிப்பிட்டுள்ளனர்" என்றார்.

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்

"கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என நம் முன்னோர்கள் கூறிருக்கிறார்களே, ஏன் அவ்வாறு கூறியிருக்கிறார்கள்? என்று என் அப்பாவிடம் கேட்டேன்.

"அந்தக்காலத்தில் வானுயர கட்டிடங்களோ அல்லது தொலைத்தொடர்பு கோபுரங்களோ இல்லை. எனவே மாரி காலங்களில் இடிமின்னல் தாக்கம் அதிகமாக காணப்படும் பொழுது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே கோவிலின் கோபுர உச்சிகளில் கூரான கலசங்களை வைத்தனர். இடிமின்னல் தாக்கம் ஏற்படும் பொழுது, அது கோபுர கலசம் ஊடாக பூமியை சென்றடையும். மக்களைத்தாக்காது. இதற்காகவே அவ்வாறு கூறப்பட்டது. மேலும் தற்பொழுது கூட எந்த மதமாக இருந்தாலும் அவர்களுடைய ஆலயத்தின் உச்சிப்பகுதி கூராக இருப்பதனை அவதானிக்க முடியும்" என்றார். மேலும் இவ்வாறு தொடர்ந்து தாக்கப்படும் கலசம் கும்பாவிஷேக தினத்தில் அமிலத்தன்மையுள்ள பழம் , நெய் போன்றவற்றினால் சுத்தம் செய்யப்படுகிறது. 

கடவுளை வணங்கினால் பரீட்சையில் சித்தி

 "சோதனைக்கு போகேக்க கோவிலுக்கு போய் வாசலில் நின்று பிள்ளையாரை கும்பிட்டுவிட்டுபோடா" என  அம்மா கூறினார். இது உண்மையா என ஒருதடவை என் அப்பாவிடம் கேட்டேன்.

பொதுவாக கோவிலில் மூலவர் வாசலில் இருந்து மிகநீண்ட தூரத்தில் இருப்பார். அவர் கருங்கல்லினால் ஆனா கரியநிறச் சிலையாக காணப்படுவார். அதுவும் இருட்டான கருவறையில் மங்கலான ஒற்றைத் தீபத்தில் காட்சிதருவார். அவ்வாறானதொரு நிலையில் மூலவரை நாம் வாசலில்நின்று உற்றுநோக்கி மனதார வழிபடும் பொழுது எமது ஐம்புலனும் அடங்கி மனதிற்கு கட்டுப்படும். அப்படியே பரீட்சைக்கு சென்றால் கவனம் முழுக்க வினாத்தாளில் இருக்கும். பரீட்சையை நனறாக எழுத முடியும் என்று அவர் கூறினார். மேலும் இதனால் தான் எந்தக்காரியத்தினை தொடங்கும் முன்பும் கோவிலுக்கு சென்று வருதல் வேண்டும் என நம் முன்னோர்கள் கூறுகின்றனர் என்றார்.

நாரதர் கலகம் நன்மையில் முடியும்

ஒருதடவை என் அப்பாவிடம் கேட்டேன்  நாரதர் என்னும் நகைச்சுவைப் பாத்திரம் எமது சரித்திரத்தில் காணப்படுகிறதே. அது எதற்காக உருவாக்கப்பட்டது. எமது வாழ்வியலில் அதன் பங்கு என்ன எனக்  கேட்டேன்.

தற்பொழுது Brainstone என்னும் கருத்துதிர்ப்பு அல்லது மூளையின் தூண்டுதல் என்பது யோசனைகளை உருவாக்க அல்லது சிக்கல்களைத் தீர்க்க குழு விவாதம் நாடாத்தப்படுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.. இதில் உறுப்பினர்கள் தன்னிச்சையாக யோசனைகளையும் தீர்வுகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள் ஒரு சிக்கலைப் பற்றி தீவிரமாக சிந்திப்பதன் மூலம் அதைத் தீர்க்க முயற்சிக்கவும் செய்கிறார்கள். இது முதலில் 1930 இல் Alex Faickney Osborn என்பவரால் முன்வைக்கப்பட்டது. இதனை நாம் முக்கியத்துவம் கொடுத்து பயன்படுத்துகிறோம். ஆனால் இதனை எமது முன்னோர்கள் சரித்திரத்தில் நாரதர் என்னும் பாத்திரத்தினூடாக உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். இதனை "நாரதர் கலகம் நன்மையில் முடியும்" என்று கூறியுள்ளனர். ஆனால் நாம் நாரதர் பாத்திரத்தினை தவறாக சித்திரித்து அதன் ஆரம்ப கருத்தான கலகத்தினை தோற்றுவித்தல் என்பதனை மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் அவர் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் ஓர் சிக்கலை முன்கூட்டியே அனுமானித்து அதற்குரிய தீர்வினையும் வெளிக்கொணரும் நுட்பத்தினை அறிமுகப்படுத்தினார். அதனால் எமது சரித்திரத்தனை திருவிளையாடல் மற்றும் சரஸ்வதி சபதம் போன்ற வெறும் பொழுதுபோக்கு திரைப்படங்களாக பார்க்காமல் அத்திரைப்படங்களினூடாக வெளிவரும் கருத்துதிர்ப்பு நுட்பங்களை அறிந்துகொள்ள வேண்டும் எனக்கூறினார்.

பந்திக்கு முந்து படைக்கு பிந்து

இதனை பலர் சாப்பாட்டிற்கு முன்னிற்க வேண்டும் என்றும் சண்டையென்றால் தூர விலகியிருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர். அனால் உண்மையில் ஓர் சபை நடுவே சாப்பாட்டிற்கு முதலில் அழைக்கப்படுபர் அந்த சபையில் உள்ள பெரியவர் ஆவார். அவ்வாறான நிலையில் இருத்தல் வேண்டும். அதேபோன்று படை நடைவடிக்கைகளில் பின்னாடி நின்று அதனை வழிநடத்துப்பார் தளபதி ஆவார். அவரே அங்கு பெரியவர். அவ்வாறான ஓர் நிலையை நீ அடையவேண்டும். அதாவது ஒருவரின் மனம்குளிரும் செயல் என்றாலும் மனம்வருந்தும் செயல் என்றாலும் தலைமைப்பொறுப்பினை ஏற்கும் நிலையில் இருத்தல் வேண்டும். ஏனெனில் மனம்வருந்தும் செயலில் ஓர் நல்லவர் தலைமைப்பொறுப்பில் இருந்தால் அச்செயல் பேரழிவை ஏற்படுத்தாது.

குறை கூறுதல்

நான் வெளி மாவட்டம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த  காலத்தில் மேலதிகாரி ஒருவர் எப்பொழுதும் எனது வேலையில் ஏதாவதொரு குறையினை கண்டுபிடித்து கூற...