நீ ஓர் குறிப்பிட்ட இடத்தினை அடைவதற்கு புறக்காரணிகளின் தன்மைக்கு ஏற்ப வாகனங்களை பயன்படுத்த வேண்டும். உதராணமாக நீ செல்லவேண்டிய இடம் ஓர் தீவாக இருப்பின் நிச்சயமாக ஓர் படகையோ விமானத்தையோ பயன்படுத்த வேண்டும். அதேபோன்று தரையில் கூடிய தூரத்தில் உள்ள இடமாயின் வேகமாக அல்லது நீண்டதூரம் பயணிக்கக்கூடிய வாகனத்தை பயன்படுத்த வேண்டும். துவிச்சக்கர வண்டியையோ அல்லது கால்நடையாகவோ செல்ல முயற்சிக்கக் கூடாது. உன்னுடயை தேவையை வசதிவாய்ப்பு, காலநேரம், தேவையின் தன்மை என்பனவே தீர்மானிக்கும். எனவே நீ ஒரு வாகனத்தை ஓர் நிலையில் விமர்சிக்கவோ வெறுக்கவோ முடியாது. அவ்வாறேதான் உன்னுடயை மதமும் கடவுளை அடைய வழிகாட்டுகிறது. எப்பொழுதும் எந்த மதத்தையும் வெறுக்கவோ ஒதுக்கவோ கூடாது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் கடவுளையடைய வழிகாட்டுகின்றது. கடவுள் ஒன்றுதான். ஒவ்வொருவரும் புறப்படும் இடமும் பாதையுமே வேறுபடுகின்றன.
No comments:
Post a Comment